Skip links

2026 අංක දරන ත්‍රස්තවාදයෙන් රාජ්‍ය ආරක්ෂා කිරීමේ පනත් කෙටුම්පත (PSTA) වහාම ඉවත් කර ගැනීම පිළිබඳව CSMD අධිකරණ අමාත්‍යංශය වෙත යොමුකල ලිපිය

අයේෂා ජිනසේන මහත්මිය(PC)
ලේකම්,
අධිකරණ සහ ජාතික ඒකාබද්ධතා අමාත්‍යංශය,
අංක 19, ශ්‍රී සංඝරාජ මාවත,
කොළඹ 10.

15.02.2026

විෂය: 2026 අංක දරන ත්‍රස්තවාදයෙන් රාජ්‍ය ආරක්ෂා කිරීමේ පනත් කෙටුම්පත (PSTA) වහාම ඉවත් කර ගැනීම පිළිබඳව.

ඔබ අමාත්‍යංශ වෙබ් අඩවියේ ප්‍රසිද්ධ කර ඇති ‘ත්‍රස්තවාදයෙන් රාජ්‍ය ආරක්ෂා කිරීමේ පනත් කෙටුම්පත’ (PSTA) සම්බන්ධයෙන් පවතින බරපතල විරෝධය සහ එහි අඩංගු මර්දනකාරී විධිවිධාන පිළිබඳව මෙම ලිපිය මගින් අවධාරණය කිරීමට ‘සමාජ මාධ්‍ය ප්‍රකාශනය සඳහා වූ සාමූහිකය (CSMD)’ කැමැත්තෙමු. මෙම පනත හුදෙක් 1979 අංක 48 දරන ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනතේ (PTA) මර්දනකාරී ව්‍යුහය එලෙසම සහ එයටත් වඩා බරපතල තත්ත්වයන් ප්‍රතිනිර්මාණය කිරීමක් බව අධ්‍යයනයන් තුළින් පැහැදිලි වෙයි.

‘ත්‍රස්තවාදයෙන් රාජ්‍ය ආරක්ෂා කිරීමේ පනත් කෙටුම්පත’ (PSTA) සම්බන්ධයෙන් පැන නැගී ඇති මූලික ප්‍රතිචාර නිරීක්ෂණය කිරීමේදී, එය පුරවැසියන්ගේ මූලික මිනිස් අයිතිවාසිකමක් වන ප්‍රකාශනයේ නිදහස ඇතුලු අයිතිවාසිකම් දැඩි ලෙස අඩපණ කරන මෙවලමක් බවට පත්වීමේ බරපතල අනතුරක් පවතින බව අපි පෙන්වා දෙමු.

මෙම පනත් කෙටුම්පතේ පවතින අතිශය මර්දනකාරී, ප්‍රජාතන්ත්‍ර විරෝධී ප්‍රතිපාදන හේතුවෙන් එය වහාම ඉවත් කර ගන්නා ලෙස පහත කරුණු කිහිපය පදනම් කර ගනිමින් ඉල්ලා සිටිමු:
• අපැහැදිලි නිර්වචන සහ ප්‍රකාශන නිදහස මර්දනය: ‘ත්‍රස්තවාදය’ යන්න අපැහැදිලි ලෙස අර්ථ දැක්වීම – PSTA පනත් කෙටුම්පත තුළ ත්‍රස්තවාදය යන්නට ලබා දී ඇති නිර්වචනය අතිශය පුළුල් සහ අපැහැදිලි ය. රජයේ ක්‍රියාකලාපයන් විවේචනය කිරීම, සාමකාමී විරෝධතාවල නිරත වීම හෝ පාලකයන්ට අප්‍රසන්න/ අකමැති අදහස් පළ කිරීම පවා, ‘රජයට එරෙහිව ජනතාව පොළඹවන’ හෝ ‘රාජ්‍ය ආරක්ෂාවට තර්ජනයක්’ වන ක්‍රියාවන් ලෙස අර්ථකථනය කිරීමට මෙමගින් ඉඩ ප්‍රස්ථාව සැලසේ.

• රහස්‍ය තොරතුරු සහ සිවිල් ක්‍රියාකාරකම් (78 වැනි වගන්තිය): ‘රහස්‍ය තොරතුරු’ යන්න පුළුල් ලෙස අර්ථ දැක්වීම හරහා සාමකාමී විරෝධතාවල ඡායාරූප ගැනීම හෝ සිවිල් කටයුතුවලට ආරක්ෂක අංශ මැදිහත්වීම පිළිබඳ වාර්තා කිරීම පවා අපරාධයක් බවට පත්කිරීමේ අවදානමක් පවතී

• අනිවාර්ය තොරතුරු වාර්තා කිරීමේ බලපෑම (15 වැනි වගන්තිය): ත්‍රස්තවාදී වැරදි පිළිබඳ තොරතුරු ලබාදීමට අපොහොසත් වීම වසර හතක සිර දඬුවම් ලැබිය හැකි වරදක් ලෙස නම් කිරීම මගින් මාධ්‍යවේදීන්, නීතිඥයන් ඇතුලු වෘත්තීකයන්ගේ මෙන්ම ආගමික නායකයන්ගේ වෘත්තීය රහස්‍යභාවය සහ සදාචාරාත්මක බැඳීම් බරපතල ලෙස උල්ලංඝනයට ලක් විය හැකිය.

• ඩිජිටල් සන්නිවේදනයට එල්ල වන තර්ජනය (55 වැනි වගන්තිය): මහේස්ත්‍රාත්වරයෙකුට ගුප්තකේතනය කළ (Encrypted) පද්ධති විවෘත කිරීමට (Decrypt) නියෝග ලබා දීමේ බලය පැවරීම හරහා පුද්ගලික ඩිජිටල් සන්නිවේදනයේ රහස්‍යභාවය සම්පූර්ණයෙන්ම අහෝසි වීමේ අවදානමක් පවතී. අන්තර්ජාලය සහ ඩිජිටල් අවකාශය තුළ සන්නිවේදනය දැඩි ලෙස නිරීක්ෂණය කිරීමට සහ පාලනය කිරීමට පනතින් ලබා දෙන බලතල මගින්, පුද්ගලයන්ගේ සන්නිවේදන අයිතිය අහිමි වන අතර එය ප්‍රජාතන්ත්‍රවාදී සංවාදයකට ඇති ඉඩකඩ මුළුමනින්ම අහුරා දමයි.

• හමුදාවට පොලිස් බලතල පැවරීම සහ රඳවා තබා ගැනීම (19, 20, 24 වැනි වගන්ති): හමුදාවට සහ වෙරළාරක්ෂක නිළධාරීන්ට අත්අඩංගුවට ගැනීම් සහ සෝදිසි කිරීම් සඳහා බලය පැවරීම සහ පුද්ගලයන් රඳවා තබා ගැනීමට අවසර ලබා දීම මගින් මර්දනකාරී පාලනයකට මග පාදයි.

• මාධ්‍යවේදීන් සහ සිවිල් ක්‍රියාකාරීන් ඉලක්ක කිරීම: තොරතුරු වාර්තා කිරීමේදී සහ මහජන මතය ගොඩනැගීමේදී මාධ්‍යවේදීන්ට සහ සමාජ මාධ්‍ය පරිශීලකයින්ට මෙම පනත යටතේ දැඩි පීඩනයක් එල්ල විය හැකිය. “ත්‍රස්තවාදයට අනුබල දීම” යන ලේබලය යටතේ ඕනෑම විවේචනාත්මක වාර්තාකරණයක් නීතියේ දැලට හසුකර ගැනීමට බලධාරීන්ට හැකි වීම නිසා මාධ්‍ය නිදහස අඩපණ කරන මෙන්ම ස්වයං-වාරණය/‘භීතියේ සෙවනැලි’(Chilling Effect) රජයන යුගයක් නිර්මාණය වනු ඇත.

මෙම පනත් කෙටුම්පත මගින් සාමාන්‍ය අපරාධ නීතියට පරිබාහිරව විධායකයට අසීමිත බලතල පවරා දී ඇති අතර, එය සිවිල් වැසියන්ගේ මූලික අයිතිවාසිකම් සහ ප්‍රජාතන්ත්‍රවාදී වටිනාකම් බරපතල ලෙස අනතුරේ හෙළයි. එසේම, මෙවැනි විශේෂ මර්දනකාරී පනත් වෙනුවට, රටේ දැනට පවතින සාමාන්‍ය අපරාධ නීතිය(අවශ්‍ය නම් ජාත්‍යන්තර මානව හිමිකම් රාමුවලට පටහැනි නොවන අකාරයට) දියුණු කරමින් සහ නීතියේ ආධිපත්‍යය තහවුරු කිරීම මගින් පුරවැසියන්ගේ මානව අයිතිවාසිකම් තහවුරු කිරීම මගින් මහජනයාගේ ආරක්ෂාව තහවුරු කිරීමට හැකියාව පවතින බව අපි අවධාරණය කරමු.

එබැවින්, ජාතික ආරක්ෂාව යනු ප්‍රකාශනයේ නිදහස ඇතුලු ප්‍රජාතන්ත්‍රවාදී වටිනාකම් මරා දැමීම සඳහා භාවිතා කරන ‘හිස් චෙක් පතක්’ නොවිය යුතුය. එබැවින් මානව අයිතිවාසිකම් මර්දනය කරන, පුරවැසියාගේ හඬ යටපත් කරන මෙම PSTA පනත් කෙටුම්පත වහාම ඉවත් කර ගන්නා ලෙස අපි ඉල්ලා සිටිමු.

නිදහස් මතයන් යටපත් කිරීමෙන්, පෞද්ගලිකත්වයට ඇති අයිතිය ඇතුලු මානව අයිතිවාසිකම් අඩපණ කිරීමෙන් ජාතික ආරක්ෂාව තහවුරු කළ නොහැකි බවත්, එයින් සිදුවන්නේ, යෝජිත ඩිජිටල් ව්‍යාපෘතිවල ඇති හරයාත්මක තත්ත්වයන්ට බලපෑම් එල්ල වීමත්, විදෙස් ආයෝජන සහ එවැනි ප්‍රතිලාභවලට දැවැන්ත බලපෑමක් එල්ලවීමත් හරහා සමාජය අස්ථාවර වීම සහ ඒකාධිපතිවාදයට මඟ පෑදීම බවත් අපි වැඩිදුරටත් අවධාරණය කරමු. එම නිසා ‘සමාජ මාධ්‍ය ප්‍රකාශනය සදහා වූ සාමූහිකය (CSMD)’ නැවතත් අවධාරණය කරනු ලබන්නේ, යෝජිත ත්‍රස්තවාදයෙන් රාජ්‍ය ආරක්ෂා කිරීමේ පනත් කෙටුම්පත (PSTA)’ ඉවත් කරගන්නා ලෙසත්, ජාතික ජන බලවේග ආණ්ඩුව බලයට පත්වීමට පෙර ජනතාවට ලබා දුන් පොරොන්දුව පරිදි ‘ත්‍රස්තවාදය වැළැක්වීමේ පනත’ (PTA) අහෝසි කරමින් ජන වරමේ සැබෑ අභිලාෂයන් ඉටු කරනු ඇතැයි අපි බලාපොරොත්තු වෙමු.

මෙයට විශ්වාසී,
සම්පත් සමරකෝන්,
කැදවුම්කරු,
‘සමාජ මාධ්‍ය ප්‍රකාශනය සඳහා වූ සාමූහිකය (CSMD)’
+94 777 248304

##

திருமதி அயேஷா ஜினசேன (PC)
செயலாளர்,
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு,
இலக்கம் 19, ஸ்ரீ போதிராஜ மாவத்தை,
கொழும்பு 10.

20.01.2026

விடயம்: பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபை (PSTA) உடனடியாக அகற்றிக்கொள்வது தொடர்பாக.

தங்களது அமைச்சின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபு (PSTA) தொடர்பில் நிலவுகின்ற அதிகமான எதிர்ப்புகள் மற்றும் அதில் அடங்கியுள்ள அடக்குமுறை ஏற்பாடுகள் தொடர்பில் இந்தக் கடிதம் மூலமாக தங்களுக்கு சுட்டிக் காட்ட ‘சமூக ஊடக பிரகடனம் பற்றிய கூட்டமைப்பு (CSMD) விரும்புகிறது. இச்சட்ட வரைபானது 1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் (PTA) அடக்குமுறை கட்டமைப்பினை அதே வகையிலும் அதற்கு மேலாகவும் மிகவும் பாரதூரமான வகையில் செயற்படுத்தும் ஒன்றாக காணப்படுகின்றது என்பது எமது கற்கைகள் மூலம் தெளிவாகின்றது.

‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபு (PSTA) தொடர்பில் எழுந்துள்ள அடிப்படை அவதானிப்புக்கள் தொடர்பில் கவனம் செலுத்துகின்ற போது, அது பிரஜைகளின் அடிப்படை மனித உரிமையாக காணப்படுகின்ற கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட உரிமைகளை மிகப் பாரதூரமான வகையில் செயலிழக்கச் செய்கின்ற கருவியாக செயற்படும் மிகவும் கடுமைமயான ஒரு நிலைமை காணப்படுகின்றது என்பதனை நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

இந்த சட்ட வரைபில் காணப்படுகின்ற மிகவும் கடுமையான அடக்குமுறை மற்றும் ஜனநாயக எதிர்ப்பு ஏற்பாடுகள் காரணமாக அதனை உடனடியாக அகற்றிக் கொள்ளுமாறு கீழ்வரும் விடயங்களை அடிப்படையாகக் கொண்டு நாம் கேட்டுக் கொள்கிறோம்.

 தெளிவற்ற வியாக்கியானங்கள் மற்றும் கருத்து வெளிப்பாட்டு சுதந்திர அடக்குமுறை: ‘பயங்கரவாதம்’ என்பதனை தெளிவற்ற வகையில் வரைவிலக்கணம் செய்தல் – PSTA சட்ட வரைபில் பயங்கரவாதம் என்பதற்கு வழங்கப்பட்டுள்ள வரைவிலக்கணமானது உண்மையில் மிகவும் விரிவானதும் தெளிவற்றதுமாக காணப்படுகின்றமை. அரசாங்கத்தின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்தல், அமைதியான எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுதல் அல்லது ஆட்சியாளர்கள் விரும்பத்தகாத / விருப்பமற்ற கருத்துக்களை தெரிவிப்பது கூட, ‘அரசுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிடுகின்ற’ அல்லது அரச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்ற’ ஒரு நடவடிக்கை என வியாக்கியானம் செய்வதற்கு இதனுடாக சந்தர்ப்பம் ஏற்படுத்தப்படுகிறது.

 இரகசியத் தகவல்கள் மற்றும் சிவில் நடவடிக்கைகள் (78ஆவது பிரிவு): ‘இரகசியத் தகவல்கள்’ என்பது மிக விரிவான வகையில் வியாக்கியானம் செய்யப்பட்டுள்ளதனுடாக அமைதியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது புகைப்படம் எடுத்தல் அல்லது சிவில் நடவடிக்கைகளில் பாதுகாப்புத் தரப்பினரின் தலையீடு தொடர்பில் அறிக்கையிடுதல் என்பன கூட குற்றமாக அமையக் கூடிய ஆபத்து காணப்படுகின்றமை.

 கட்டாயத் தகவல்களை அறிக்கையிடுதல் தொடர்பான அழுத்தங்கள் (15ஆவது பிரிவு): பயங்கரவாதத் தவறுகள் பற்றிய தகவல்களை பெற்றுக் கொடுக்கத் தவறுதல் ஏழு வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்கக் கூடிய ஒரு தவறாக குறிப்பிடப்பட்டுள்ளதன் மூலமாக ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் உள்ளிட்ட தொழிற்றுறையாளர்களினதும் மற்றும் சமயத் தலைவர்களினதும் தொழிற்றுறை இரகசியத் தன்மை மற்றும் ஒழுக்கவியல் சார்ந்த பிணைப்புகள் மிகப் பாரதூரமான வகையில் மீறப்பட முடியும்.

 டிஜிட்டல் தொடர்பாடல் மீது ஏற்படுத்தப்படும் அச்சுறுத்தல் (55ஆவது பிரிவு): நீதவான் ஒருவருக்கு மறைக்குறியீட்டாக்கம் செய்யப்பட்ட (Encrypted) சாதனத்தை திறந்து பார்ப்பதற்கான கட்டளையைப் பிறப்பிக்கும் அதிகாரத்தினூடாக தனிப்பட்ட டிஜிட்டல் தொடர்பாடலின் இரகசியத் தன்மை முழுமையாக இல்லாது போகும் ஆபத்தான நிலைமை காணப்படுகின்றது. இணையதள மற்றும் டிஜிட்டல் வெளியில் தொடர்பாடலானது மிகவும் பாரதூரமான வகையில் கண்காணிக்கப்படுவதற்கு மற்றும் கட்டுப்படுத்தப்படுவதற்கு சட்டத்தினூடாக வழங்கப்படுகின்ற அதிகாரத்தின் மூலம் நபர்களின் தொடர்பாடல் உரிமை மறுக்கப்படுவதோடு அது ஜனநாயக ரீதியாக இடம்பெறக் கூடிய உரையாடல்களின் சூழலை முழுமையாக இல்லாதொழித்து விடும்.

 ஆயுதந் தாங்கிய இராணுவத்தினருக்கு பொலிஸ் தத்துவங்களை அளித்தல் மற்றும் தடுத்து வைத்திருத்தல் (19, 20, 24ஆவது பிரிவுகள்): ஆயுதந் தாங்கிய இராணுவத்தினருக்கு மற்றும் கரையோரப் பாதுகாவலர்களுக்கு கைது செய்வதற்கு மற்றும் தேடுகையிடுவதற்கான தத்துவங்கள் அளிக்கப்படுதல் மற்றும் நபர்களைத் தடுத்து வைத்தருப்பதற்கான அனுமதியை அளிப்பதன் என்பது அடக்குமுறை ஆளுகைக்கு வழிகோலும்.

 ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் செயற்பாட்டாளர்கள் இலக்கு வைக்கப்படுதல்: தகவல் அறிக்கையிடலின் போது மற்றும் பொதுமக்கள் கருத்துக்களை கட்டியெழுப்புகின்ற போது ஊடகவியலாளர்களுக்கு மற்றும் சமூக ஊடக கையாளுநர்களுக்கு இச்சட்டத்தின் மூலமாக பாரிய அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படலாம். “பயங்கரவாதத்திற்கு உடந்தையளிக்கின்றார்” என்ற முத்திரையின் கீழ் எந்தவொரு விமர்சன ரீதியான அறிக்கையிடலையும் சட்டத்தின் வலையில் சிக்க வைக்கும் இயலுமை அதிகாரிகளுக்கு கிடைக்கின்ற காரணத்தினால் ஊடக சுதந்திரம் செயலிழக்கப்பட வைப்பதற்கும் அதேவேளை சுய தணிக்கைக்கு / ஆர்வங்கெடுக்கின்ற விளைவினை (Chilling Effect) ஏற்படுத்துகின்ற யுகமொன்றினை உருவாக்கும் நிலைமை ஏற்படக்கூடும்.

 இந்த சட்ட வரைபினூடாக பொதுவான குற்றவியல் சட்டத்திற்கு புறம்பாக நிறைவேற்றுத்துறைக்கு வரையறையற்ற தத்துவங்கள் கையளிக்கப்பட்டுள்ளதோடு, அது சிவில் பிரஜைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் ஜனநாயக பெறுமதிகள் தொடர்பில் பாரிய அளவிலான பாதிப்பினை ஏற்படுத்தி விடும். அத்துடன், இத்தகைய விசேட அடக்குமுறையான சட்டங்களுக்கு பதிலாக, நாட்டில் நடைமுறையிலுள்ள சாதாரண குற்றவியல் சட்டங்களை (அவசியமெனில், சர்வதேச மனித உரிமைச் சட்டகங்களை மீறாத வகையில்) இற்றைப்படுத்தி முன்னேற்றி சட்டத்தின் ஆளுமையை உறுதிப்படுத்துவதன் மூலமாக பிரஜைகளின் மனித உரிமைகளை உறுதிப்படுத்தி அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கான இயலுமை உள்ளது என்பதனையும் நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

 எனவே, தேசிய பாதுகாப்பு என்பது கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம் உள்ளிட்ட ஜனநாயக பெறுமதிகளை கொன்றொழிப்பதற்காக பயன்படுத்தும் ஓர் “வெற்று காசோலை” போன்றாகி விடக்கூடாது. ஆகவே மனித உரிமைகளை அடக்கி ஒடுக்குகின்ற, பிரஜைகளின் குரலை முடக்குகின்ற இந்த PSTA சட்ட வரைபினை உடனடியாக அகற்றிக் கொள்ளுமாறு நாம் வேண்டிக்கொள்கின்றோம்.

 சுதந்திரமாக சிந்திப்பதனை முடக்குவதன் மூலம், தனிப்பட்ட உரிமை உள்ளிட்ட மனித உரிமைகளை செயலிழக்க வைப்பதன் மூலமாக தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த முடியாது என்பதையும், அவ்வாறு செய்வதன் மூலம் முன்மொழியப்பட்டுள்ள டிஜிட்டல் கருத்திட்டங்களில் உள்ள முக்கியமான விடயங்கள் மீது அழுத்தங்கள் ஏற்படும் என்பதோடு வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அத்தகைய நன்மைகளுக்கு மிகப்பெரும் தாக்கம் ஏற்படுத்தப்பட்டு சமூகத்தில் ஸ்தீரமற்ற நிலைமை ஏற்பட்டு எதேச்சாதிகாரத்திற்கு வழிகோலும் என்பதையும் நாம் சுட்டிக் காட்டுகின்றோம். ஆகவே, ‘சமூக ஊடக பிரகடனம் பற்றிய கூட்டமைப்பு (CSMD)’ மீண்டும் வழியுறுத்தி நிற்பது யாதெனில், ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைபினை (PSTA) அகற்றிக் கொள்ளுமாறும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கமைவாக பயங்கரவாத தடைச் சட்டத்தினை (PTA) இரத்துச் செய்து மக்கள் ஆணையின் உண்மையான அபிலாஷைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

இப்படிக்கு உண்மையுள்ள,

சம்பத் சமரகோன்
அழைப்பாளர்,
சமூக ஊடக பிரகடனம் பற்றிய கூட்டமைப்பு (CSMD)
+94 777 248304

ABOUT CSMD: The Social Media Declaration collective is a coalition established by civil society organizations, citizen activists, websites, and subject-matter experts, with the aim of promoting a ‘human rights–based’, Socially Responsible use of Social Media’. This collective is dedicated to advancing human rights, including digital rights, and to systematically analyzing online content through research, advocacy, training, awareness-raising, and critical inquiry. It continuously strives to foster and sustainably promote democratic discourse in online spaces grounded in internet freedom, transparency–openness, and democratic values. In this way, the collective remains committed to ensuring societal well-being through the influence of technology and to encouraging the development of responsible, ethical use of social media in the digital age.

The following organizations belong to this collective. Sri Lanka Working Journalists Association | Jaffna Press Club | Eastern Provinces Journalists forum | Centre for Policy Alternatives | Sri Lanka Muslim Media Forum | Human Elevation Organization | Law & Society Trust | SARVODAYA Shramadana Movement | Movement for Land and Agricultural Reform | ActNow Youth Campaign | Wedabima Media collective | National Collaboration Development | Foundation Best Vision foundation | Internet Media Action | maatram.org | vikalpa.org | groundviews.org | minormatters.org

Sinhala Statement to MoJ – PSTA_CSMD_PDF

Tamil Statement to MoJ – PSTA- CSMD – TAMIL

Leave a comment

This website uses cookies to improve your web experience.